தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
TSK
TSK · Matthew 8:3
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ‹நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;›
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: ‹சீராதே, அமைதியாக இரு› என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: ‹எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம்.›
அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: ‹எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு› என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.
அவர்களை அவர் பார்த்து: ‹நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்› என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள்.
இவைகளைச் சொன்னபின்பு: ‹லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.›